வெள்ளி, டிசம்பர் 01, 2017

குருதியின் நீர்மை

சொட்டுச் சொட்டாய் உதிர்ந்து கொண்டிருக்கிறது
எவ்வளவற்றை ஏந்திவிட முடியுமோ
அவ்வளவையும் ஏந்திவிடக் கை குவிக்கிறேன்
ஏந்திய மறுநொடி வழிந்தபோதும்
மழைத் துளியே உன்மீதிலான காதலைத்தான்
எப்படித் துறப்பேன்
உள்ளிறங்கி உள்ளிறங்கி

என் ரத்தக் குழாய்களில்
பயணிக்கும் பேரன்பு உனக்கு வாய்க்காதபோதும்
என் குருதியின் நீர்மை நீதானெனக்
கற்பித்துக் கொள்கிறேன்
பைசாசத்தைக் கூட்டு சேர்த்துக் கொண்டு
வெறியாடும் பொழுதுகளையும் மன்னித்து
பழரசமருந்தி இசைபாடும் 

காவிய நாயகனாக உருவகித்துக்
காத்திருக்கப் பழகுகிறேன்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...