திங்கள், டிசம்பர் 04, 2017

சேதாரமிலா உபச்சாரம்

வருத்தங்களை உருக்கி உருக்கி 
இழையத்தட்டி நகாசு கிகாசு செய்து 
புத்திமதிகளை 
நாலு கல்லோ சலங்கையோ செதுக்கி 
அமுக்கி அமுக்கி ஓரம் மூடி 
அடக்கமாகப் பெட்டியிலிட்டு 
வைத்திருங்களேன்
செய்கூலி சேதாரத்தோடு நல்ல விலை போகும்
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ
எதற்குப் பின் வருத்தத்திடம்
உபசார வார்த்தைகள்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...