திங்கள், டிசம்பர் 04, 2017

மீனின்குரல் கேட்கும் தூண்டில்

வனத்தில் நிறைந்திருந்த
வயலட் சிறு பூக்களின் பெயர் தெரியவில்லை
வண்ணத்துப் பூச்சிக்கும் எனக்கும்
அதனாலென்ன

********************************************************
கு
ளத்தின் பாடலை 
நீங்கள் தவளையின் குரலில் கேட்கிறீர்கள் 
உங்கள் தூண்டில் மீனின் குரலில் கேட்க 
நானோ நீரின் குரலில்

********************************************************
தூறலில் தொடங்காத 
மழையையும் 
பழகிக் கொள்கின்றன தொட்டிச் செடிகள்
***************************************************************

கண்ணாடித்தாள் போலச் சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சி 
எங்கு கிழிபடுமோ 
பதட்டமாயிருந்ததில் 
சற்றுமுன் கிழித்த இதயம் மறந்து போனது

******************************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...