புதன், மார்ச் 20, 2019

விண்மீன்கள் பொதிந்த பித்தளைத் தூக்கு

நல்ல அழுத்தமான பித்தளை தூக்கு அது
மூடவும் திறக்கவும் 
தனிக்கவனம் வேண்டுகிற 
அதற்குள்தான் இட்டு வைத்திருந்தேன் 
சரளைக்கல்போற் பருத்த விண்மீன்களை
ஒவ்வொன்றாக எடுத்து 
உள்ளங்கையில் வைத்து 
துணைசேர்த்துக் கண்ணீர்விட
கதறியழ
தனியாகச் சொரியும் கண்ணீருக்கு 
துயர்குறைக்கும் ரசாயனம் சேர்வதில்லை
அந்த விண்மீனுக்கு
சாய்ந்தழும் தோள் அளவு
விஸ்தீரணம் பெருகுமென்பதும்
நீண்டு நீண்டு கன்னக்கறை
துடைக்கும் விரலாக வளருமென்பதும்
என் ரகசியம்
எப்படித் திறப்பதென மறந்த
நான் தட்டித்தட்டி 
நகர்த்திக்கொண்டிருக்கிறேன்
பால்கட்டிய தாய்முலையெனக்
கண்ணீரால் 
கனத்துக்கொண்டிருக்கிறது இதயம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...