ஞாயிறு, ஜூன் 26, 2016

மே 10 முகநூலில்

அதீதத்தில் வந்த சமீபக் கவிதை
சுமந்தாய்
சுமந்தேன்
சுமப்பார்கள்
சிற்றெறும்பின் முதுகில்
முதலை ஏறி அமர்ந்தபடி
நட..நட என்கிறது
அட..அட..
என்ன திறமையான எறும்பு
குரல் கேட்டவர் இதை வாசிக்கிறார்
மற்றவர்..
அவர்தான் நசுங்கிவிட்டாரே
அவர் முதுகு முதலைதான்
இவர் முதுகில்..
இங்கிருந்து பார்க்கையில்
அதுவே பாறாங்கல்
பொறுப்பு என்பீர்கள் உங்கள் மொழியில்-

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...