ஞாயிறு, ஜூன் 26, 2016

என்னை என்னவென்று சொல்லிக்கொள்வது


நெருப்பாக இருக்க முடிவுசெய்கையில்
ஊழிப் பெருமழைக்காலமாகி விடுகிறது
பனிப்பாளமாகக் கிடக்கையில்
மேலிருந்து உச்சிவெயில்
கீழிருந்து காட்டுத்தீ
சகஹிருதயர்களை அடையாளம் கண்டால்
அவர்களைச் சாவு தின்று விட்டிருக்கிறது
தனிமையே தீர்வென்கையில்
நான் நிற்குமிடம் திருவிழாக்கூட்டம்
எனை என்னசெய்வாய் வேய்ங்குழலே
சங்கீத ஞானமில்லா வெறும்
ஊதாங்குழலாகிக் கிடக்கும் உன்னிடம்
நிச்சயம் கிடைக்கவேண்டும் விடை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...