புதன், நவம்பர் 30, 2011

முரண் (சற்றே பெரிய கவிதை)


வெற்றிக்கு விலாசம்
சொல்லாத
பயணம்..

குறிப்பு ஒட்டிப்
புதையல் தேடுபவன்போல் 
சந்துகள் தாண்டிய 
பொந்துக்குள் 
தலையோடு கால் போர்த்தியவன் 
குறட்டையி ல்  குறுக்கிட்டு 
கைகுலுக்கிப் புன்னகைத்தது 
வெற்றி...
அவனுக்கு 
அதையும் 
தன்னையும்  அடையாளமே புரியவில்லை...
முகங்கழுவி வா...
தேநீர் பருகி
விரிவாய்ப் பேசலாம்
என
ஒட்டுத்திண்ணையில்
கால்மடித்துகாத்திருக்கிறது 
வெற்றி!
***********************************

தன்னை சந்தித்தாக வேண்டியது 
வெற்றியின் விதி 
எனக் கிளம்பினான் இவன் ....

தெளிவாக 
முழுப்பெயர் (தலை எழுத்தோடு)
கதவு எண்< தெரு<நகரம்>வட்டம்
மாநிலம்<அஞ்சல்குறியீடு 
அலைபேசி எண் _உட்பட 
முழுமுகவரி தந்திருந்தான்...
எதற்கும் இருக்கட்டும் என 
மின் அஞ்சல் முகவரிகூட...

புன்னகையோடு காத்திருந்தவன் 
ஊர்ப்பக்கம்
வெற்றியின் நிழலே.......
....................................காணோம்
உறுதியான ஆவலில்
பரிமாறத் தயாரான விருந்து
ஊசத்தொடங்க
வாத்தியக்குழு தூங்கிவழிய
மாவிலைத் தோரணம்
வாடியுதிரச் சகியாது
விசாரித்தான்.....
வெற்றி
துளியும் அறியாப் புதியவன்போல்
விளக்கம் சொல்லாமல்
அவனை
வெறிக்கின்றது !

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முதலில், தாங்கள் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி!
"வெற்றி
துளியும் அறியாப் புதியவன்போல்
விளக்கம் சொல்லாமல்
அவனை
வெறிக்கின்றது !"
அருமையான வரிகள்...பகிர்விற்கு
நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

உமா மோகன் சொன்னது…

nandri...thodar varugaikkum pathivukkum...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...