ஞாயிறு, நவம்பர் 20, 2011

பாடலைக் கண்டேன்...


மாற்றித்தடவிய 
தூரிகையாய்
நிறம் கலங்கிய மேகம்...
அழைப்புமணிக்கு
விரைவதாய் நகர...

அலைபேசிக் கோபுரங்கள் 
மின்வடங்கள் 
மாறிமாறி
பாண்டி ஆடிக் கொண்டிருந்தன 
பறவைகள் .

முதிராப் பசுமையோடு 
காற்றில் நடுங்கியது நாற்று 

சுழலாக் குறுந்தகடு 
தாண்டி 
மனதில் அதிர்ந்து கொண்டிருந்த 
நரம்பொலியில்
கசிந்த விழியோரம் கண்டு 
கரிசனமாய்க் கண்ணாடி ஏற்றினாய் ....

இசை நின்றது ...!    



 தோழர் வேணுவின் கட்டுரை தொடர்ச்சி....##

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...