திங்கள், நவம்பர் 14, 2011

குழந்தைகள்....


கைகால் முளைத்த மலர்கள்
நடக்கும் குயில்கள்
வீடு நிறைந்திருக்கிறது
ஒற்றை வரம் இருப்பினும்...

சொல்லில் ,அசைவில்
கனவில் கேள்வியில்
மனம் ஒன்றும் நொடிகளில்
நீள் தவத்தில்
கிட்டா தரிசனம்
சித்திக்கும்!

குழந்தைப்பருவம்
நாமும்
நம் வீட்டுக் குழந்தைகளும்
தாண்டியபின்னும்
அந்த "பாவமும்
பரவசமும்
விலகா மனசு
மழைநின்றும்
தூறலின் குளுமை தங்கும்
காற்றும் புவியுமாக 
மகிமை தாங்குகிறது... 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...