வியாழன், ஜூலை 25, 2019

பறவையின் இறகில் உன் நிறம்

உலகில் புரிதல் மிச்சமிருக்கிறது
அன்பு மிச்சமிருக்கிறது
ரசனை மிச்சமிருக்கிறது
உன்னை அழைத்து சொல்ல நினைத்தவற்றை
எனக்கே சொல்லிக்கொண்டேன்
உனக்காய்த் தோன்றும்போது
நீயும் சொல்லிக்கொள்வாய்
கருநீலவாலை லேசாக உதறி
விரித்துக்கொள்ளும்
அந்தப் பறவையின் இறகில் 

உன்நிறம் உணர்வதும் அப்போது நடக்கும்
படம் swaminathan Rajamani

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...