வியாழன், ஜூலை 04, 2019

பொன்துகள் உதிர்க்கும்

இருளைப் பொருட்படுத்தாத
சரக்கொன்றை 
தானே வெளிச்சமென 
அறிவித்துக்கொள்கிறது
ஆருடங்களின் கருணையிலாச்சொற்கள்
 கேட்டும் கலங்காது
அலட்சிய உதட்டுச்சுழிப்பாக 
நான்கு பூ உதிர்க்கிறது
பிடிமானம் பிடிமானம் 

என அலைவுறும் தொட்டிமுல்லைக்கு
நான் காட்டும் நிலாவுமாக நிற்கிறது
இழப்பைச் சுட்டுகிறாயா
துளிர்ப்பைச் சொல்கிறாயா
என்ற கேள்விக்கும்

 அசைந்து 
இரண்டு பொன்துகள் உதிர்க்கும் புத்தமரம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...