செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

வழியும் மன்னிப்பு

கலம் நிறைய கரைத்து வைத்தாயிற்று
ஆடிக்கூழ் போல அவரவர் பாத்திரத்திலும்
வழிய வழிய ஊற்றிக்கொண்டிருக்கிறேன்
மன்னிப்பை
ஏமாளி ஏமாளி என்று
ஒவ்வொரு ஆணியாக இறக்காதீர்கள்


********************************************************
காலிப்பாத்திரமே
காலிப்பாத்திரமே
காற்றில்லையா உன்னில்

நீ எறியும் பூ
அடியில் சாய்கையில் அறிய மாட்டாயா
கையளவு நீர்வார்த்திடு
ஒருநாளேனும் மிதந்து வாழட்டும் மலர்
*********************************************************
நம்பிக்கொள்கிறீர்கள்
தூளியிலிட்டு ஆட்ட அனுமதிக்கும்வரை
குழந்தை என்று
உந்தி இறங்கும்தருணம்
விழுகிறது நம்பிக்கை


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...