செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

மனசில் படியும் சித்திரங்கள்

சரியாகக் கரைபடாது மிஞ்சிப்போய்விட்ட 
ஹார்லிக்சின் சிறுகட்டி
 தம்ளரின் அடியில் பிடித்துக்கிடக்கிறது
நீ சொல்லிச்சென்ற செய்தியும் அப்படியே
சுரண்டித்தான் கழுவ வேண்டும்

முகம்பார்த்துப்பேச வசதியாக
நகர்த்திப்போட்ட நாற்காலிகள்
கூடத்தின் இருப்பைக்
குலைக்கின்றன
இருந்தபடி இருந்து
பாராது சொல்லியிருந்தால்
கண்ணிலேறிய தூசிக்கு
அந்த சிரமமில்லை
நகர்த்தும்போது எழும்
கிறீச்சின் மாத்திரைகளில்
மனம்படித்து தொலைக்காதே
       


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...