ஞாயிறு, மார்ச் 22, 2020

இழுக்காத திரைச் சீலை

பச்சைக்கடலையை
ஓடுடைத்து
ஓடுடைத்து
வாயிலிட்டுக் கொள்ளும் அதே லாவகத்துடன்
என்னையும் மெல்லத்தெரிகிறதே உனக்கு
*************************************************************
ஏதாவது ஏடாகூடமாக
நடக்கும்போதுதான்
மேடையில்
அம்போவென விட்டு
எங்கோ நகர்ந்துவிடுகிறாய்
திரைச்சீலை இழுக்காமல்

***********************************************************
ஒன்றேபோல
காலையும் தலையையும் 

அசைத்துக் கொண்டிருக்கின்றனர் 
மேடைநிறைந்த கலைஞர்கள்
ஒவ்வொரு மனசும்
அசைந்துகொண்டிருந்தது தனித்தனியாக


***********************************************************


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...