ஞாயிறு, மார்ச் 22, 2020

திறந்திருக்கும் கதவு

முன்முற்றச் சிறுதொட்டி
சரிந்துகிடக்கிறது

தூறலில்தான் தொடங்கியது

சிறுபையோடு வெளியேறிய அவள் 
வீடு திரும்பிவிடுவாள் என்றுதான் 
எட்டிப்பார்க்கிறது 
மடங்கிக்கிடக்கும் கிளை
வீடும் அப்படித்தான்
நினைத்தது போல

கதவு ஒருக்களித்தபடியே
கிடக்கிறது

1 கருத்து:

G.M Balasubramaniam சொன்னது…

வீட்டுக்கு என்னாயிற்று

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...