ஞாயிறு, மார்ச் 22, 2020

நினைவுகளின் தாழ்வாரம்

கைப்பிடிப் புல்லைத் 
தெருவோரக் கன்றுக்குட்டிக்குப் 
போட்ட கணக்கிலேயே 
சொர்க்கத்தை 
உறுதிசெய்வார் சுந்தரம் மாமா
சிறுகிண்ணத்தில் 
பச்சரிசிவெல்லம் பிசைந்தபடி 
அடுத்தவீட்டுத்தொழுவம் நாடும் 
கமலத்தாச்சி
மறக்காமல் தாளில் சுற்றிப்போவாள் 
பிள்ளையார் பிடிக்க 
கைப்பிடி சாணம்
புட்டியில் கிடைப்பது
தரமில்லையென
தீட்டுகழிக்க கோமியத்துக்காக 
செம்போடு காத்திருப்பார்
சின்னதாத்தா
அன்றாடம் தவிடு கரைத்து
தீவனம்படைத்து
கைசிவக்கக் கயிறு இழுத்துக் கட்டிக் 
கொட்டில் கழுவும் ரங்கநாயகிக்கு
பால்குவளை தவிர 
வேறெதுவும் நினைவிருப்பதில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...