ஞாயிறு, மார்ச் 22, 2020

அதே நீ

மிகநீண்ட இடைவெளிக்குப்பின் 
பார்த்துக்கொண்டோம்
எத்தனை ஆண்டுகள் கழித்து 
என்பதை வீடு திரும்பியதும்தான் 
கணக்கிட்டேன்
நீ முந்திக்கொண்டாய்
பகிர்ந்துகொண்ட அலைபேசி எண்ணிலிருந்து
பதினான்கு நீண்ட வருடங்கள் 
என்றொரு குறுஞ்செய்தி விழுந்தது
இப்போது 

உன்னை அப்படியே அடைந்துவிட்டேன்
அதே நீ


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...