செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

 நதியும்  நிலவும்

நதியோடு 
நகர்ந்து செல்கிறது நிலா !
சிலநாள்  துண்டாக ....
சிலநாள் பந்தாக ...
நீர்
கொள்ளவுமில்லை ....
தள்ளவுமில்லை ...
நிலவைக்கொண்டாடினோம் ...
நிலவோடே 
வாழ்ந்தோம் ...
நிலாச்சுவை மறந்த உலகில் 
ஓடிவா பாட ஒருவருமில்லை ......
சப்பி எறிந்த மாங்கொட்டை போல் 
நிலா மேகப்புழுதியில் ......     

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...