செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கவலை

      இப்படித்தான் தொடங்கும்...

பனிப் பொட்டு..
சிறு தூரல்...
கடும் சாரல்...
பேய் மழை...
     
      கரையாதிருந்த...
      நான்
      காணவேயில்லை...

கையளவு ஊற்று...
தவழும் நீர்...
கரை தொடும் ஓட்டம்...
கடும்புனல்...
    
      நனையாதிருந்த
      நான்
      நதியின் சுழலுக்கு இரை..!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...