செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கண்ணாமூச்சி

துணியோ...
கதவோ...
திரைச்சிலையோ...
எதுவும் இல்லாவிடில்...
ஒற்றைக்கையோ...
பாவனையோ...
மறைத்து..
அம்மா காணோமே...
பாப்பா காணோமே...
வாய் கொள்ளா...
சிரிப்போடு...
தோ இருக்கே...
வாரித் தழுவும்
குழந்தையிடம்
எப்படிச் சொல்வது
இதுதான் வாழ்க்கை என்று...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...