செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

குற்றவியல் பிரிவு



மாட்டிவைத்த கொசுவத்தி
நகர்த்திய நாற்காலி
ஓட்ட நகர்த்திய தரைதுடைப்பான்
வேகநடை போட்ட வீட்டுச்செருப்பு
எதனாலும்
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மரணம் ...
வண்ணம் மினுங்கிய
குட்டி
பட்டாம்பூச்சியை
குறுகுறுபபின்றி
எடுத்தெறிந்தது ...
இந்த
ஒற்றைவிரல்தான்! 

1 கருத்து:

venu's pathivukal சொன்னது…

கவிதைக்கு நுடபமான பார்வை வேண்டியதாகிறது..
அப்புறம் தேர்ச்சியான சொற்கள்,
அச்சொல்லைப் பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து புறப்பட்டு
வரும் சொற்கள்...
கற்பனையின் வீச்சு வாசகரின் கரம் பற்றுவதாய்...

எல்லா விதத்திலும் அருமையாக அமைகிறது உங்கள் எழுத்து..
கவிதைகளைப் படைத்துக் கொண்டிருங்கள் ஓய்வின்றி.

எஸ் வி வேணுகோபாலன்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...