சனி, ஏப்ரல் 16, 2016

ஏப்ரல் பூ -4

நிலவைக்காட்டுகிறேன்
விரலைப் பார்த்துக்
கொண்டிருக்கிறாய்
***************************************
சிறு பயணம்தான்
இருங்கள்
அந்தக் கருங்குருவியுடன்
போய் வருகிறேன்
சன்னலின் வானத்துக்குள்
மூன்றே விளக்குத்தூண்கள்


வாழையிலை தானே 
காற்றே போதும்
உறையிலிடு வாளை
****************************************
எப்போதாவது 
தெரியட்டும் வெளிச்சம்
இருள் பழகிய கண்கள்
இருப்பதன்
அர்த்தம் சொல்ல
********************************************
உத்தரவு வரும்போது
மட்டுமே
தோட்டாவா கத்தியா
எனத்தெரியும்

அதுவரை புன்னகைத்திரு
இதுவும் சொல்லப்பட்டதே
********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...