வியாழன், ஆகஸ்ட் 31, 2017

காலமே நீ வாழி

இங்கேதான் இருக்கிறோம் 
இல்லாமலும் இருக்கிறோம் 
இருக்கும்போதும் 
இல்லாதபோதும்

*****************************************
வருத்தங்களைப் பிட்டுத்தின்றபடியே
ஒரு ஸ்மைலி 
போட வாய்ப்பளிக்கும்காலமே நீ வாழி

**********************************************

உப்பு உறைப்பைச்
சரிபார்த்தபடி முடிகின்றன நாட்கள்
அவர்கள் செய்யும் துரோகங்களைப் பற்றி
நினைக்கும் போது புரையேறுகிறதுதான்
தண்ணீர்க்குவளை அருகில்தானே
போதும்


*****************************************************

கதவு திறக்கப் 
பார்த்திருந்தோம்
வெளியேற
காற்றுகூட இல்லையென உணராது


***********************************************************




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...