வியாழன், ஆகஸ்ட் 31, 2017

கனவின் சீதனம்

இந்த முகத்தை மறந்திருக்கவே கூடாது
ஆயினும்
எங்கேயோ பார்த்த சாடையிலும் 
ஒருநாள்
தோன்றுகிறது
*****************************************************

கனவுகளுக்கு அர்த்தம் உண்டா என்ன
நினைவுக்கே இன்னும்
தெரியாதபோது

*************************************************

கூரையில் வழிவதற்கும்
சன்னலில் இறங்குவதற்கும்
வேறுபாடு தெரிகிறது
மழைக்கு
சப்தத்தாலும் ருசி

************************************************
அத்துணை நஞ்சையும்
அள்ளிப்பருகச் சொல்லும் வாழ்வை வாழ
ஒரு கோப்பை சீதனம்
தந்தது நீயா
*******************************************

கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிடலாம்
கட்டுகளை என்ன செய்ய
முளைக்குச்சி அத்தனை ஆழம்
கட்டுக்கயிறு அத்தனை இறுக்கம்

******************************************************




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...