புதன், ஜூன் 26, 2019

மே 17

ஈரமணல்
நின்றுகொண்டேயிருக்கிறேன்
குறுகுறுவென ஊறும் பெருமணலும் நுரையும்
சட்டென எக்கணமும்
என் பாதந்தாண்டி உடைநனைத்து
தரையரித்து இழுக்கலாம்
அலை ஏறி ஏறிப்போகிறது
இடமும் வலமுமாக
சற்றே உட்கார்ந்துகொள்ளச்
சொல்கிறது கால்கள்
எப்படியும் நனைக்காமலா போகும்
அடுத்து போகவேண்டியது
மலைமுகடு
ஒற்றைப்பாறை
நாள் நினைவூட்டும்
இழப்புகளுக்காக
கண்ணீரைப்பெருக்க
தோதான இடங்கள்
வேறு எதுவுமிருந்தாலும் சொல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...