திங்கள், டிசம்பர் 31, 2012
ஞாயிறு, டிசம்பர் 30, 2012
சனி, டிசம்பர் 29, 2012
நடத்தை பழகிடு மகனே
எனக்குப் பிறவாத
என் இனிய பொன்மகளே..!
எனக்குத்தெரியும்
நீ இதையும் தாண்டி
வருவாய்....வருவாய்..!
புதைகுழியில் உன்னை
மூடியிருந்த
மண்ணைக் குழைத்துத்தான்
மேடு சமைத்தாய்...
"அங்கேயே கிடக்காதே "
என உன்னை உலுக்கியதும்
உடன் மண் குழைத்ததும்
ஆணின் கரங்களும் தானே ..
நம்பிக்கையிருக்கிறது..
நீ
நடைபழகி முடிக்கும்போது
மன அழுக்கிலா மகன்கள்
உன்னுடன்
நடை பயில்வார்கள்!
செவ்வாய், டிசம்பர் 25, 2012
தவிப்பின் குரல்
பேசு..பேசாதே..
உன் கண்ணும் மறைத்திருக்கலாம் ..
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,
எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?
உன் கண்ணும் மறைத்திருக்கலாம் ..
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,
எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?
சனி, டிசம்பர் 22, 2012
அபி உலகம் -11
வாசல் வேம்பு
வந்த கதை கேட்டாள் அபி
'காக்கா ,ஒரு வேப்பம்பழம்
சாப்டுச்சாம் ...
ம் ...
அந்த வெதைய நம்ம வீட்டு
வாசல்ல போட்டுச்சாம் ..
ம்ம்
அதுதான் வளர்ந்து மரமாச்சாம்..."
கையிலிருந்த ஆப்பிளோடு
காகத்துக்காகக் காத்திருக்கிறாள் அபி.
**********************
நூடுல்ஸ் காய்ப்பது
செடியிலா,மரத்திலா..
சாக்லேட் காயா,பழமா...
காக்காய் பாட்டியிடம் திருடும்
வடை கீழே விழுந்தால்
வடை மரம் முளைக்குமா ?
அபியின் கேள்விகளோடு
விழித்திருக்கும் தாத்தாவுக்கு
கொஞ்சம் கைகொடுங்களேன் ....
புதன், டிசம்பர் 19, 2012
தடங்கல(ள )ற்ற பாதை
உன் வழிதான்
என் வழி
என் வழிதான்
அவன் வழி -அவள் வழி
அவள் ..அவன்..அவள்..
அவர்கள்..இவர்கள்...
யார் பாதம் புல் பூண்டு
மிதித்ததோ ..?
தடம் பிறந்தது என்றோ..?
அறியோம் பராபரமே ..
அடி பிரதட்சிண பாதயாத்ரையில்தான்
என்,உன்,அவன்,அவள்
வாழ்வு நடக்கிறது..
சேறோ ..,நீரோ,
அறியேன்...
ஒடிந்த முள்..,பறக்கப் பார்க்கும்
ஒற்றை இதழ்
எதையும் தலைதூக்க விடாது
பாதங்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன
என்..,உன்..,அவன்..அவள்..,
இவன்,இவள் ..பாதங்கள்
என் வழி
என் வழிதான்
அவன் வழி -அவள் வழி
அவள் ..அவன்..அவள்..
அவர்கள்..இவர்கள்...
யார் பாதம் புல் பூண்டு
மிதித்ததோ ..?
தடம் பிறந்தது என்றோ..?
அறியோம் பராபரமே ..
அடி பிரதட்சிண பாதயாத்ரையில்தான்
என்,உன்,அவன்,அவள்
வாழ்வு நடக்கிறது..
சேறோ ..,நீரோ,
அறியேன்...
ஒடிந்த முள்..,பறக்கப் பார்க்கும்
ஒற்றை இதழ்
எதையும் தலைதூக்க விடாது
பாதங்கள் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன
என்..,உன்..,அவன்..அவள்..,
இவன்,இவள் ..பாதங்கள்
செவ்வாய், டிசம்பர் 18, 2012
ஞாயிறு, டிசம்பர் 16, 2012
செவ்வாய், டிசம்பர் 11, 2012
ஞாயிறு, டிசம்பர் 09, 2012
வெள்ளி, டிசம்பர் 07, 2012
"ஆம்பிள சட்டை "
பிரிய நடிகை
காதலன் பிரிவை
அவன் சட்டை நிரப்புவதாக
பட்டன் திருகி நின்ற படம்
அன்று -வினோதம்.
நாகரிகப் பெண்களின்
தேநீர்ச் சட்டை வாசகங்கள்
நாவலில் ,
கவர்ச்சிக்கோ,கேலிக்கோ.....
மடித்துவிட்ட
முழுக்கைச் சட்டையோடு வந்து
பேசினால் -அவள்
புரட்சிப்பெண் என்பது நம்பிக்கை!
.
பள்ளி நாடகத்தில்
ஆண்வேட வாய்ப்பை
அண்ணன் தம்பி உள்ளவளுக்கே
தருவார் ருக்மிணி டீச்சர்..
எங்கள் வீடு போல்,
பாத்திரம் வாங்க உதவாத
மாமாவின் கதர்ச் சட்டைகள்
அத்தைக்குப் பிடித்ததேயில்லை.
யோசனைகளோடு ,
பழைய சட்டைகள் மடிக்கிறேன்-
சேலையின்மேல் அணிந்து
கல் சுமக்கப்போகும் செல்விக்காகவும்,
புதன், டிசம்பர் 05, 2012
சனி, டிசம்பர் 01, 2012
ஞாயிறு, நவம்பர் 25, 2012
நாளையும் வரக்கூடிய பரிசுப்பொதி
ஒரு காலையைப்
பரிசாக அனுப்பியிருந்தார்கள்...
வெளிச்சத் தாள் பளபளப்பில்
பொதியைப் பிரித்தேன் ,...
தெர்மகோலில் செய்த புன்னகை...
சின்னக் கண்ணாடிப் பேழையில்
நம்பிக்கை..,
உதிரி சாக்லேட்டுகளாய்
சந்தோஷங்கள்..,
பரிசு நியதியை மீறாமல்
என் நேரம் ஏந்திய கடிகாரம்..,
பானம் தயாரிக்க நினைவூட்டிய
அரை டஜன் கோப்பைகள்..,
இடம் நிறைத்த
உதிரித்தாள் உரையாடல்கள்..,
இந்தக் களேபரத்தில்
நல்லவேளையாய் உடையவில்லை
கனவுப் பூ பொம்மையின்
இதழ்கள்...
எல்லாவற்றுக்கும் பக்கமாய்த்தான்
கிடக்கிறது
இறுக முடிந்திருந்து
நான் கத்தரித்த இருள் நாடா...!
செவ்வாய், அக்டோபர் 30, 2012
"பஞ்சம் பிழைக்க..."
21 10 12கல்கி இதழில் வெளியானது

முதுகிலேறி,
எல்லைக்காவல் செய்த
மண்குதிரைகள் ரெண்டும்

தண்டவாளம் தாண்டி
வண்ணமிழந்து சாய்ந்து கிடக்க ,
அவ்வழி வந்த
விரைவுரெயிலில் தொற்றி,
கட்டிட மேஸ்திரியாகப்
போயிருக்கலாம்
நொண்டிக்கருப்பு.. ...
வண்ணக்கொடிகளுடன்
எல்லைக்கல் கட்டி நிற்கும்
புதிய நகரில்
கருவைக்காடும்,கருப்பு கோயிலும்
தேடிக்கொண்டிருக்கிறான்
அப்பனின் வேண்டுதலுக்காய்
புதிய குதிரை
நேர்ந்துவிட வந்தவன்.
வியாழன், அக்டோபர் 18, 2012
நான்... நான்... நான் ....
சின்ன அத்தை போல்
செவிமடல் ..
வம்சமே ஏறிய நெற்றிமேடு ..
பிசிறடிக்கும் பல்வரிசை ,
தலைசாய்த்த உரையாடல்
ரெண்டுமே தாத்தாவழி ...
வரிக்கு வரி "ம் "போடுவது
ஆச்சியின் வழக்கம் ..
பெயரின் பின்வால்
தலைமுறைச் சிந்தனைகளை
வெட்டி ஒட்டியது !
ஆகிருதி கூட்டும் ஆடைகள்
அவ்வப்போதைய நடைமுறைப்படி ...
"நான் "
என்னிலிருந்து பிரிவதுமில்லை
என்னில் உறைவதுமில்லை...
வியாழன், அக்டோபர் 11, 2012
செவ்வாய், அக்டோபர் 09, 2012
செவ்வாய், அக்டோபர் 02, 2012
ஒரு குடம் தண்ணி ஊத்தி....
கீற்று இணையத்தில் இன்று
கவிழ்ந்த தென்னங்கீற்றாய்
விரிந்த பஞ்சுத்தலை கோதி
கால் நீட்டிக் கிடக்கும்
கிழவியைப்
போகவரப் பார்த்திருக்கிறேன்...
ஒருவேளை
இவள் அறியக் கூடுமென ,
ஒருநாள் கேட்டேன்
புதிய வீட்டின்
வாசலோரப் பூஞ்செடிகள்
எத்தனைகுடம்
நீரூற்றியும்
ஒரு பூ கூட பூக்காததன்
மர்மத்தை..!
தளும்பத் தளும்ப
நீர் நிறைந்திருந்த
குளத்துக்கு
குடங்கள் போதாதென
வன்மமாய்ச் சிரித்தாள்...
மனநிலை பிறழ்ந்தவளோ
என நழுவியபோது
பின்னால் சொல்லிக்கொண்டிருந்தாள்
வீடுகளாகிவிட்ட
குளக்கரையில்,வெகுகாலமாய்
கூட்டிய செங்கல்லினுள் சிற்றகலாகக்
காவலிருந்த
பேச்சி
தான்தானென்று...!
MY SONG.... MY STORY..-1
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி
நீங்கள் கூடியிருக்கையில்
மௌனமாகச் சில்லறை தந்து
விலகிப்போகும்
அவனும் ஒரு பாடலாசிரியன் என
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு
அவன் எழுதிய வரிகளை
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான்
வெற்றிக்குப்பின்னான
ஒரு நேர்முகத்தில்
தான் தாண்டியதான சவால்களில்
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய்
வந்த பாடலை
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும்
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை
பெயர் சொல்லாமல் யாரேனும்
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும்
இருப்பில் இல்லாததாய்
வானொலிகளும் மறுத்துவிட்ட
அவன் பாடலை நீங்கள்
அறிவீர்களா?
ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
காலமாகிய சாட்சி
அது அன்று பூத்திருந்தது ...
சம்பவம் நிகழ்ந்தபோது,
அதிர்ச்சியில் குலுங்கிப்
பனித்துளி உதிர்ந்தது,
அழுததுபோல் கூட
இருந்திருக்கலாம்...!
ஆனாலும்...
வாகனம் சறுக்கித் தடுப்போரம்
விழுந்த
சரவணக்குமாரின்
உயிர் பிரிந்த நொடியில்
என்ன கூவினான்
என்பதை-அந்த
நெடுஞ்சாலையோர அரளியால்
சொல்ல முடியவில்லை...
ஒருவேளை
அந்தச் செவ்வரளி நிறம்
அவனுக்குப் பிடிக்குமானால்
அல்லிவட்டத்தில்
அவன் ஆவி தஞ்சமடைந்திருக்கலாம் !
ஆனாலும்...
அது நேற்றாகிவிட்டதால்
எதையும் சொல்லாமல்
அந்த அரளி சாம்பிக்கிடக்கிறது.
சனி, செப்டம்பர் 29, 2012
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
இடிந்த வாசல்
புதன், டிசம்பர் 14, 2011
காலம்கடந்து நிற்கும்
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்..
வியாழன், செப்டம்பர் 27, 2012
தங்க வேட்டை !
மீள் பகிர்வு
நெற்றிச்சுட்டி
...........................
தோடு ..ஜிமிக்கி ...
மாட்டல் ....,
சங்கிலி ,நெக்லஸ் ...
...........................
.........................
..........................
வளையல் ..மோதிரம் ,
..........................
.........................
.........................
விளம்பரத்தாளை
வைத்துவிட்டு
எழுந்த தமிழரசி
காது .மூக்கின்
வேப்பங்குச்சி மாற்றினாள்ll lllllllllllllllllllllll
குறிப்பு!
கோடிட்ட இடங்கள்
அவளுக்குப்பெயர்
தெரியா நகைகள் ....
புதன், செப்டம்பர் 26, 2012
MY SONG...MY STORY...2
அவன் பாடிய
அந்த இரு பாடல்களையும்,
உரக்கப்பாடிடவும்,
முடிந்தால்-ஆடவும்
தீராத ஆவல் கனன்றபடி அவன்....
ஒரு குத்துப்பாடலும்,ஒரு கானாபாடலும்
பாடிப் பிரபலமடையாதிருந்த
அவனை
நீங்களும் அறிவீர்கள் ..
பிரமாதமான பக்திப் பாடகனாக ...
எந்த மேடையிலும் ,
தன விருப்பமாகவோ,
நேயர் விருப்பமாகவோ
தன பாடலிரண்டையும்
பாடவே முடியாது போன
அவன்
குளியலறைக்குள் முயன்றபோது
அதுவும்
பக்திப்பாடலாகவே தொனிக்கிறது ...
செவ்வாய், செப்டம்பர் 18, 2012
வழியும் நிழல்கள்
ஒட்ட நறுக்கியபோது
சட்டமிட்டிருக்கலாம்...
ஓரப்பிசிறுகள்
வழிய வழிய ...
முக்கோணம்..
நீள்சதுரம்...
செவ்வகம்...கோளம்...
விரிந்து,வளர்ந்து,வளைந்து .....
கொண்டேயிருக்கிறது
.........................
நிழல்!
நறுக்கிய நிழல்
உற்சாகம் கொப்பளிக்க உயர்ந்து
தலைக்குமேல்
சிரிக்கும்போது,
சிறுநடுக்கம்....
தள்ளிவிட்டும் சிரிக்குமோ...?
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
வலி பற்றிய கதைகள்...
10 9 12 உயிரோசை இணைய வார இதழில் வெளியானது
வலியின் திரவம்
வழிந்தோடியது...
காய்ந்த கோடுகளின்
அடையாளம்
வரி வரியாய்ப் படிந்திட
வலியின் கதைகளைப் பேசியபடி
பொழுதுகள் விடிகின்றன...
முடிகின்றன..
நேற்றைய வலியோ ,இன்றையதோ...
சென்ற வருடத்தையதோ..
உன்னுடையதோ,என்னுடையதோ...
சொல்லிக்கொள்ள,
வியக்க,ஒப்பிட...
வலிகள் ஏராளமாய்!
வலி பிழிந்த நொடிக்குத்
தொடர்பிலாது
தக்கைச் சொற்களாய் மிதக்கின்றன
வலி பற்றிய கதைகள் -
ஞாயிறு, செப்டம்பர் 09, 2012
MY SONG..MY STORY...1
தேநீர்க்கடையின்
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி
நீங்கள் கூடியிருக்கையில்
மௌனமாகச் சில்லறை தந்து
விலகிப்போகும்
அவனும் ஒரு பாடலாசிரியன் என
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு
அவன் எழுதிய வரிகளை
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான்
வெற்றிக்குப்பின்னான
ஒரு நேர்முகத்தில்
தான் தாண்டியதான சவால்களில்
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய்
வந்த பாடலை
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும்
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை
பெயர் சொல்லாமல் யாரேனும்
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும்
இருப்பில் இல்லாததாய்
வானொலிகளும் மறுத்துவிட்ட
அவன் பாடலை நீங்கள்
அறிவீர்களா?
வியாழன், செப்டம்பர் 06, 2012
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
உலரும் மை
காணாமற் போனவன் குறித்து
புகார் தருகையில்
கேட்டார்கள் ....
அவன் என்ன ஆடை உடுத்தியிருந்தான்?
அது நீலததின் சாயலா?
பச்சையின் சாயலா?
கோடு-நீலததில் பச்சையா?
பச்சையில் நீலமா?
அதை அணிந்து
அவர் பார்த்தார்-
மாற்றிப் போனானோ...?
அவன் காணாமற் போனது...
அப்போதா?-எப்போதோவா?
சுழலும் கேள்விகளின்
விடை மனதிற் படியாமல்
திறந்த பேனாவோடு
அமர்ந்திருக்கும் தந்தைக்கு
நீங்கள் உதவ முடியுமா?
அந்தப் பேனாவின்
மை
உலர்ந்து கொண்டிருக்கிறது.
சனி, ஆகஸ்ட் 25, 2012
வாழ்வின் தருணங்களை எழுப்புதல்
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு
வர்த்தக வளாகம்
எது வேண்டுமானாலும்
எழுப்புங்கள்...
தனிமனைகளாகக் கூடப்
பிரிக்கலாம்.
நோக்கம்போல் செய்யுங்கள்....
சுவரொட்டி ,ஒலிபெருக்கிப் பாடல்கள்,
தட்டிப்படங்கள்,துண்டு விளம்பரங்கள்
கோலாகலத் தோரணங்களை
விலக்கி நுழைவதும்,
கட்டி இறங்குவதுமான உற்சாக முகங்கள்...
வியர்வை ,கசங்கல்,காத்திருப்பு,
தள்ளுமுள்ளு தாண்டி...
கண்ணீரும் புன்னகையும்
கைத்தட்டலும் சீழ்க்கையுமாய்
யார் யார் வாழ்வையோ
அங்கீகரித்த பொழுதுகள்
அந்த கிழிந்த திரைக்கு
கீழும் ,
உடைந்த இருக்கைகளின் ஊடேயும்
உறைந்து கிடக்கின்றன ....
அவற்றை தக்க முறையில்
அடக்கம் செய்துவிட்டு
மூடிக்கிடக்கும்
பழைய திரையரங்கை
நோக்கம் போல் மாற்றிக்கொள்ளுங்கள் ...
தினமும் காட்சி தொடங்குமுன்
ஒலித்த
பழைய பாடலின் எதிரொலி
தொடர்நதால்
பயப்பட வேண்டாம்
மணி அடித்ததும் நின்றுவிடும்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
உன்னோடு போனது துக்கம்
எந்த வீட்டிலும்
பிலாக்கணம் பாடவும்
எந்தச் சாவிலும் மாரடிக்கவும்
முன்னே முன்னே போகும்
அலமேலு ஆத்தா
வாய் கோணிச் செத்தாள்...
சாராயக் காசு வாங்க
ஆளில்லாக் கவலையில்
மகனும்,
சிறுவாட்டு இருப்பு சொல்லாது
பொசுக்கென்று போன கவலையில்
மருமகளும்...
வாசல் பெருமாளைப் பட்டினி
போட வேண்டாமென
அழுகையை ஒத்தி வைத்தது
தெரு சனம்..
சனி, ஆகஸ்ட் 18, 2012
வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
-
எப்படியோ முடிந்தது பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும் தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப் பார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில...