செவ்வாய், நவம்பர் 21, 2017

எங்களுக்கென.....

பேசத்துவங்குமுன் சற்றே
தொண்டை கமறுகிறது
உனது சொற்களா எனதா
எதைத் துப்புவது என்ற
தள்ளுமுள்ளுதான்
இதற்கு விக்ஸ் என்செயும்
ஸ்ட்ரெப்ஸில்ஸ் தான் என் செயும்


*************************************************

நீங்கள் நம்பவே போவதில்லை
எங்களுக்கென்று ஒரு உயரம்
இருந்ததையும்
எங்களுக்கென்று ஒரு துயரம்
இருப்பதையும்

கண்ணீராலாவதென்ன
***********************************************

கதவைத் தட்டுபவர்கள் என்று
யாருமே இல்லை
மின்சார அழைப்புமணி 
வைக்கத்தொடங்கிய பின்னும்
கதவைத்தட்டி அழைப்பவர்கள்
கதவைத்தட்டி நுழைபவர்கள் இருந்தார்கள்
அப்படி யாரும் தட்டாத
பொழுதுகளிலும்
தட்டிய ஒலியின் பிரமையில்
திடுக்கிட்டு எழுமளவு
கதவைத் தட்டும் ஒலி நம் இதயத்தில்
கேட்டுக்கொண்டிருந்தது
இங்கோ தட்டுவதற்கானதல்ல கதவு
என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்
எப்படி நுழைகிறார்கள் என்பதுதான்
தெளிவாகவில்லை


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...