செவ்வாய், நவம்பர் 21, 2017

இல்லாதபோது பெய்த மழை

இல்லாதபோது மழை பெய்திருக்கிறது
எப்படித் தெறித்திருக்கும்
எப்படி வழிந்திருக்கும்
எப்படித் தேங்கியிருக்கும்
எந்த சுவடும் இல்லாது போன 
இந்த மாலை துக்கமாய் இருக்கிறது
இருக்கும்போது

நடப்பது எதையுமே உணரமுடியாது போகிறது
நீ ஏன் இல்லாதபோது நடந்த ஒன்றைப்பற்றி
இவ்வளவு வருந்துகிறாய்
நாளையும் மழை வரலாம்

என்று நீ ஆறுதல் கூறுகிறாய்
உணராத சொற்களோ புதிய துக்கம்
நேற்றைய மழையும்
நாளைய மழையும்
ஒன்றாகி விடுமா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...