புதன், ஏப்ரல் 10, 2019

மண்மகள் அறியா வண்ணச்சீறடி



ஆரத்தியின் மஞ்சள் சுண்ணாம்புக்கரைசலை
மிதித்தே இறங்கும்
பொருக்குசரளையின்மேல் ஊற்றினேன்


திருமணவீட்டின் எதிர்மொய்யாக வரும் கொய்யாக்கன்றை
அடுத்தமுறை துரத்திவந்து கொடுத்தாலும் மறுத்து ஓடவேண்டும்

வேறெப்படி திருஷ்டி கழிக்கலாம் அத்தை
காலடியே படாது எல்லோரும் வந்துபோகும் வீட்டில்

பிசையவும் வனையவும் இடிக்கவும்  என்று 
ஆன்லைன் கிளே வந்திறங்கியது சின்னப்பெட்டியில்

மண்ணையா அள்ளிவைத்தேன் என்ற
ருக்கு பெரியம்மாவின் கேள்வி


புரியப்போவதில்லை மகளுக்கு



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...