புதன், ஏப்ரல் 10, 2019

வேரடி கூழாங்கல்

இளங்காற்று வீசியபோது
பொம்மைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்
ஒருவழியாக எடுத்துவைத்த பொம்மை 
என் கையைப் பிடித்து 
விசிறிக் கொண்டபோதுதான்
புலப்பட்டது
அத்தனை வெக்கை

**************************************************************
அந்தவழியாகப் போவது 
அந்தநாள் வழியாகப் போவது என்றே நினைத்தோம்
போகும்போது 
புலப்படவில்லை 
அந்தவழியோ நாளோ
நினைப்புத்தான்


*******************************************************************
இலைகளற்று நிற்கும் பெருமரத்தின்
காலடியில் சலசலத்து ஓடும்
நதியிடம் கேட்க 

நூறாயிரம் கேள்விகள் இருந்தன
உருண்டுவந்த கூழாங்கல் 

வேரடியில் சிக்கிநின்ற தருணம்
கேள்விகள் மறந்துபோயிற்று


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...