புதன், ஏப்ரல் 10, 2019

வா..பறக்கலாம்

எத்தனைநேரம்
எத்தனைமுறை
பேசியிருப்போம்
முகச்சுளிப்பற்ற அந்த
ஹ்ஹும்
மட்டுந்தான் நினைவிருக்கிறது


***********************************************
நான் வண்ணத்துப்பூச்சி
நீ என் இறக்கை
..............
நான் வண்ணத்துப்பூச்சி
நீ தேன்
....................
நான் வண்ணத்துப்பூச்சி
நீயும்
வண்ணத்துப்பூச்சி
வா பறக்கலாம்

****************************************************
அகன்ற உள்ளங்கையைக் குவித்து
மெல்ல மெல்ல ஒலியெழாது நெருங்கிச்சென்றேன்
நகர
நகர
நகர
....பறந்துவிட்டது
அதன் பெயர் சரியாகத் தெரிந்த
அவளுமில்லை
போகட்டும்


*****************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...