புதன், ஏப்ரல் 10, 2019

கண்ணே கலைமானே

இனிதானே கிளம்பப் போகிறாய்
என்னவாம்
சிடுசிடுப்பா
சரி நான் இங்கு இல்லை
நீ அங்கேயே இருந்துவிடு
இந்த இடம் இப்படியே இருக்கட்டும்
சில்லென
**************************************************
ஒளிஇறைந்த பாதையில்
நடந்தபோதும் உதறிக்கொண்டாய் கால்களை
சொற்களிலிருந்து தெறித்த 
பூச்சிபுழுக்களை 
மிதித்தாயா என்ன

**************************************************************

கனவென்று சொல்வதற்கில்லை
நனவென்றும் சொல்ல முடியாததை
கனவென்றாவது சொல்லலாமோ
********************************************


வெறுப்பு சொட்டிய சொற்களை 
நீ வாரியிறைத்தபோது
எங்கிருந்தோ 
கண்ணே கலைமானே ஒலித்துக் கொண்டிருந்தது
உன்னை 
,உன் சொற்களைப்
புறக்கணித்திடும்
வரிசையில்
கண்ணே கலைமானே'வையுமா...
************************************************





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...