புதன், மார்ச் 20, 2019

மற்றும் என் மனம்

கைதவறி விழுந்து ஒவ்வொரு துண்டிலும்
துயரைப் பிரதி செய்ய
வந்த அந்தக்கண்ணாடி
சரத்தின் கட்டிலிருந்து 
விடுதலை பெற்றதாக
அறை மூலைகளைச் 
சரண் அடைந்த மணிப்பரல்கள்
காற்று தாங்காது
மகரந்தம் நீங்கி மிதந்து செல்லும்
சாமந்தியிதழ்கள்
மற்றும்
என் மனம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...