புதன், மார்ச் 20, 2019

அடைத்த பெருங்கதவ மணிகள்

பேரழகென்பதைச் சொல்லும்தருணம் 
உடனே அண்ணாந்து 
பார்த்தபடி நிற்கிறாய்
குழிந்த உள்ளங்கைக்குள் 
மழைத்துளி ஏந்தி 
உச்சிமலை சேர விரைபவனே
அங்கில்லாத மழையா

*********************************************************
உறைந்திருக்கும் இலுப்பெண்ணையை 
எப்படியும்
 இளக்கி ஊற்றிவிடப் பார்க்கிறேன்
விளக்கு எரிந்துதானே ஆகணும்

**********************************************************
வெளியேறித்தான் ஆகவேண்டும்
முதலில்
இந்த தீப்பெட்டிக்குள்ளிருந்து
அடுத்து
பொட்டு கந்தகத்திலிருந்து

மீண்டும் அடைக்காதே பந்தத்தில்


*******************************************************************
எந்தப்பக்கம் திட்டிவாசல் 
என்பதும் தெரியாமல்
அடைத்த பெருங்கதவத்தின் முன் நிற்கிறேன்
காற்றிலசைகின்றன கதவின் மணிகள்
எத்தனை காலமோ
நாவசையவில்லை


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...