சனி, ஜனவரி 07, 2012

இழந்த வரங்கள்

காதலை கண்ணீரை
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை   
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,

அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
 பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...