சனி, ஜனவரி 28, 2012

ஆறாவது பூதம்

இடம் பொருள் 
அறியாக்காற்று 
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக 
தீக்குச்சி நுனியில் 
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே 
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம் 
சிறு குடுவை 
அல்லது 
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?  
 

1 கருத்து:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
ஐந்தின் இந்த நிலைக்கு இந்த ஆறாவதுதான்
காரணம் ஆயினும் இன்னும் அடங்காது திரிகிறதே
முத்தாய்ப்பாக மூன்றுமுறை சொல்லிப் போனதே
கவித்திறன்
தரமான பதிவு.வாழ்த்துக்கள்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...