சனி, ஜனவரி 28, 2012

நிறம் தந்த சாமி


 

அமர்ந்து எழுகையில் 
வண்ணத்துப்பூச்சி 
தடவிச் செல்லும் 
மினுங்கல் பொடியா?
சந்திரபிறை பொழியும் 
இரவின் ஒளித்துளியா?
ஆரஞ்சு குழம்பாய் 
அரங்கேறும் 
கதிர்ச்சொட்டா?
விரிந்த நீளத்தின்
மேக நீலங்களில்
ஏதோ ஒரு நீலமா?
துளிர்ப்பச்சை....
இலைப்பச்சை....
வெளிர்ப்பச்சை....
என்னை வரைந்த தூரிகை 
எதில் தோய்ந்தது...? 
 

4 கருத்துகள்:

கோவி சொன்னது…

அருமையான கவிதை..

Yaathoramani.blogspot.com சொன்னது…

சிந்தனையின் ஆழமும்
சொற்களின் வீரியமும்
பிரமிப்பூட்டுகிறது
வாழ்த்துக்கள்

உமா மோகன் சொன்னது…

நன்றி ரமணி சார்.இந்தப் பின்னூட்டம் உங்கள் பெருந்தன்மை.!

உமா மோகன் சொன்னது…

நன்றி நண்பரே
தொடர்ந்து வருக..உங்கள் கருத்தைத் தருக

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...