ஞாயிறு, டிசம்பர் 27, 2020

எனக்கும் உனக்கும்

 கேட்கும் நிலையில் நீ இல்லையாம்

இப்போது சொல்ல வேண்டாமென
உன் நலம் விரும்பி சொல்கிறார்
அட
சொல்லும் நிலையில் நான் கூடத்தான் இல்லை
அதைப்பற்றி யாராவது வருந்துவதோ அஞ்சுவதோ இல்லையே
நான் கோவமா இருக்கேன் என்பதையும் குழந்தைப்பிள்ளை போல நானே சொல்லிக்கொண்டு
அதற்கு நகைக்கிறாயா என அடிக்கண்ணால் பார்த்துக்கொண்டு...ச்சை
சொல்லமுடியாதொரு உணர்வுப்பெருக்கில் திணறுகையில் என்னை அணுகாது
எச்சரிப்பதற்காகவாவது ஒரு துவாரபாலகர் வேண்டும்...
பார்
எதையெல்லாம் லட்சியமாகக் குறிக்க வேண்டியிருக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...