செவ்வாய், டிசம்பர் 08, 2020

அந்தரத்தில் தொங்கும் கேள்விகள்

 ஸீரோவா

ஜீரோவா என்று
வாதிட்டுக் கொண்டு வீடு வந்த நாளுக்குப்பின்
பள்ளி செல்லவில்லை பாப்புக்குட்டி
நாளைக்கி மிஸ் கிட்ட
கேக்கலாம்னு சொன்னாம்மா மித்து
( அது மித்ராவா,மித்திராவா தெரியவில்லை)
நாளக்கி எப்பம்மா வரும்?
காலடியில் தொங்கும் பாப்புக்குட்டியிடம்
சும்மா தொணப்பாம
போய் விளையாடு என்ற அம்மாவசனம் சொல்லித் தப்புவது எத்தனைநாள் *****************************************************
முன்னங்காலை
வளைத்து சற்றே குனிந்து உற்றுப்பார்த்த நாய்க்குட்டிப் பார்வைக்கு மிரண்டே குழறினேன்
உன்னை அவ்வளவு பிடிக்கிறது அதற்கு
தூக்கு
என்றவள் சிரிப்பில்
பொறாமைதான் பெருகுகிறது
எதைத்தான் சரியாக அடையாளம் தெரிகிறது எனக்கு **********************************************************
திடீரென்று பாதையில் வந்துவிட்டது அந்த குட்டியானை
பக்கவாட்டு சாலையிலிருந்து
பக்குவமின்றி நுழைந்தவனைத் திட்ட முடியாமல்
சற்றே நிதானிக்கிறாள்
பின்னால் வந்து தாண்டும் சக ஈருருளியானுக்கு
ஒரே கேள்விதான்
செருகிவந்த
முந்தானை பறந்தால்
துப்பட்டாவின் முடிச்சு பிரிந்தால்
மணியாயிற்றே என்று சற்று முடுக்கினால்
பெண்ணைப்பார்த்துக்
கேள் என்று
மரபணுவில் புதைத்து அனுப்பிய கேள்வியை மறவாமல் வீசிவிட்டு
திரும்பும் கண்களில் சில
குற்றவுணர்ச்சியில்
தாழ்வதுண்டு
எவ்வளவு தூரம்
தாண்ட

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...