செவ்வாய், டிசம்பர் 08, 2020

நேற்றைய சம்பங்கி

 படரட்டுமெனத்தானே கயிறெல்லாம் கட்டி விட்டீர்கள் அது கைப்பிடிச்சுவர் பிடித்து ஏறுவது அவ்வளவு உறுத்துகிறதா கொழுந்து இலை நாலு கீழே கிடப்பதற்கு அணிலைச் சந்தேகப்படுவதா உங்களையா பிடிபடவில்லை

**************************************

படிக்கட்டில் சுருண்டிருக்கும் நாய்க்குட்டியாக
அவள் பாத வீக்கம்
தற்செயல் பார்வைக்குப்பின்
இழுத்துவிட்டுக் கொண்டாள் கொசுவத்தை
தெரியவேயில்லை
வீசி நடக்கும் நாழி
*****************************************
ஆளரவமற்ற மண்டபத்தில்
ஒரு வௌவால் படபடப்பாவது கேட்கிறதா
இருவாசியைத் தொட்டுவிட நீள்கிறது
அவன் கைத் தழல்
செஞ்சடைப்பிரியிலிருந்து
உதிர்கிறது
நேற்றைய சம்பங்கி ********************************************
சொல்லிக்கொண்டே
இருப்பது மட்டுமல்ல
சொல்லாமலிருப்பதும்
பதில்தான்

**********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...