செவ்வாய், டிசம்பர் 08, 2020

திரிகை மாவு

 எதையெல்லாம் என்னுடையதென்று சொல்வது சுற்றிலும் சுற்றிலும் ஊக்கு சரம் முதல் மணச்சீராய் வந்த பித்தளை அண்டா வரை

என் முகம் பாராது
அதனதன் இருப்பில்
அந்த அண்டா கூடுதலாய்
ஒரு நொடிப்பு நொடித்து
நின்று கொண்டது

என் கேள்வி உணர்ந்து விட்டதோ
*********************************************
எல்லாம் வேறென்ன
இந்த இருளுக்குள்ளேயும்
நான் இருக்கிறேன்
இந்த ஒளிக்குள்ளேயும்
நான் மறைகிறேன்
எப்படியாவது கண்டுபிடி
அல்லது கண்டுகொள்
****************************************
கைப்பிடி கைப்பிடியாகப் பெய்ய
திரிகைக்குள்ளிருந்து
மௌனமாக வீழ்ந்து கொண்டிருக்கிறது
உளுந்து
உடைபட்ட துக்கம் சொல்லாது
என்ன
கொஞ்சம் மாவு பறக்கும்
***********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...