ஞாயிறு, டிசம்பர் 27, 2020

அடையா நெடுங்கதவம்

 கோடுகளும் கட்டங்களும் மறுதலித்த நாளில் இலைகளும் மலர்களும் பின்னிக்கொள்கின்றன

யாரோ ஒருவன் தறியில் பிசிறு நறுக்கி மடித்த அடுக்கினுள்ளிருந்து
அவன் வீட்டின் ஒட்டடை விழுகிறது
முறத்தால் புடைத்த
களத்திலிருந்து
கருக்கு முதற்கொண்டு கட்டியாயிற்று கெட்டிச்சாக்கில்
உலையரிசியும் திரையிலிருந்துதான்
விளைகிறது
தறி அறுக்கும் கத்தரியோடும்
அரிசி அளக்க ஆழாக்கோடும் உட்கார் உட்கார் ஆன்லைன் திருவிழாவில் ஷட்டர் இறக்குவதில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...