ஞாயிறு, டிசம்பர் 27, 2020

அளவில் இல்லா உலகம்

 இதோ இதோ ஒவ்வொரு வரியாக நகர்த்தி பட்டென்று கண்விழிக்கிறது அந்த செம்பருத்தி

கூப்பிடு தூரத்தில்
அயர்ந்திருந்த பூனைக்குட்டி
தலை உயர்த்திப் பார்த்து
ஒரு வித்தியாசமுமில்லா
உலகம் என்ற அலட்சியத்துடன்
காலை மாற்றி மடித்து உறக்கம் தொடர்கிறது
***************************************************
உடைந்துவிடும்
கிழிந்துவிடும்
நசுங்கிவிடும்
நொறுங்கிவிடும்
கலைந்துவிடும்
சொல்லியபடியே
ஒவ்வொன்றாய்
பாப்புவுக்கு எட்டா
உயரத்தில் பத்திரப்படுத்தினேன்
வீம்பாய் நின்றவள்
மறுநொடி
பாவாடையை ஒற்றைவிரலில் உயர்த்திக்கொண்டு
ஒரு தாண்டுகுதியோடு ஓடிவிட்டாள்
எப்படித்தொட
இந்த உயரத்தை ***********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...