ஞாயிறு, ஜனவரி 29, 2012
சனி, ஜனவரி 28, 2012
ஆறாவது பூதம்
இடம் பொருள்
அறியாக்காற்று
ஏவலுக்குக்கட்டுப்பட்டு ,......
*********************
அடக்கமாக
தீக்குச்சி நுனியில்
அக்கினிக்குஞ்சு .
****************************
நட்ட கல்லுக்குள்
நாமே
பூமிபுத்திரர்!
****************************
கண்ணுக்கெட்டியவரை
விண்
என்றும் சொந்தம்!
******************************
ஜலப்பிரவாகம்
சிறு குடுவை
அல்லது
அணைமதகுகளுக்குள்...
********************************
மனசு...?
மனசு....?
மனசு...?
வியாழன், ஜனவரி 26, 2012
செவ்வாய், ஜனவரி 24, 2012
எல்லா இடமும் சதுர அடி
கருவைக்காடு
இருந்திருக்கலாம்...
அறிந்த ,அறியாப் பெயர்களுடன்
மரங்கள் நின்றிருக்கலாம் ....
எங்கள் கிராமம் போல
வயல் நடுவேயோ ...
தோப்புகள் தாண்டியோ
இருந்திருக்கலாம் ...
இன்று நாற்புற மதில் தவிர்த்து
வீடுகள் சூழ நிற்கும்
மயானம்..!.
அண்டை வீடுகளின்
தொலைக்காட்சிப் பாடல்
கூத்தனுக்குப்
பழகியிருக்கலாம்
நாற்றமும் சப்தமும்
பழகிய நம்மைப் போல ..
திங்கள், ஜனவரி 23, 2012
திங்கள், ஜனவரி 16, 2012
நிரம்பா அரங்கம்

ஓரிருவர் ...
தொடர்பிலா திக்குகளில்....
அலைபேசி நோக்கியவாறு
சில தலைகள்
அருகே எவருமிலா
மூலைஇருக்கையை
கவனிக்க வசதிஎனத்
தேர்ந்திருக்கலாம் .
தாமதமாக
சபை நிரம்பலாம்...
**************************************
எந்த சமாதானமும்
தராத நிம்மதியை
காலி இருக்கைகளுக்கும்
காதுகள் இருக்கலாம்
என்ற கற்பனை தந்தது...
இருக்கைதோறும்
ஆற்றின் மேல் ஒரு சமாதி (பழைய பாலம்)
இப்படித்தான்
என்னோடும்
உறவாடிக் கொண்டிருந்தார்கள்
கைப்பிடியோரம்
சைக்கிள் சாய்த்து வைத்து
கதையளக்கும் நிரந்தரக் கூட்டம்
சரசரவென
சமயங்களில்
வழிவிடாச் சண்டை
மோதி மோதிக்
கடந்து போகும் காற்று .....
*************************************
எல்லாம்
ஒரு சந்தேகத்தில்
முடிந்து விட்டது !
வலுவில்லை எனக்கென
வந்தது புதிய பாலம் !
காற்றும் குப்பையும்
மட்டும்
கடந்துபோகக் கிடக்கிறேன்
பக்கத்து பரபரப்பின்
பார்வையாளனாக ......
ஞாயிறு, ஜனவரி 15, 2012
சனி, ஜனவரி 14, 2012
ஒளியே வாழி!
ஒளியில் தொடங்குகிறது நாள்.. ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!
புதன், ஜனவரி 11, 2012
இறந்த காலத்தின் தெய்வம்
மைதீர்ந்த
எழுதுகோல்கள்
சிரிக்கின்றன...
கேள்வி கேட்கின்றன..
சவால் விடுகின்றன..
எழுதி முடிக்கவியலா
நெடுநெடுநெடு
வரிகளை
அடையாளம் தெரியுமா
கெக்கலிக்கின்றன ....
மணல் மூடிய நதியாக
ஈரமிலா முனைகள்
கேள்வி கேட்பது விசித்திரம்தான் !
ஆனாலும் ,
அவை
கனவிலும்
வாத்தியக் குழுவோடு
வந்திறங்கிப் பாடுகின்றன ...
அதே கேள்விகளை!
எழுதுகோல்கள்
சிரிக்கின்றன...
கேள்வி கேட்கின்றன..
சவால் விடுகின்றன..
எழுதி முடிக்கவியலா
நெடுநெடுநெடு
வரிகளை
அடையாளம் தெரியுமா
கெக்கலிக்கின்றன ....
மணல் மூடிய நதியாக
ஈரமிலா முனைகள்
கேள்வி கேட்பது விசித்திரம்தான் !
ஆனாலும் ,
அவை
கனவிலும்
வாத்தியக் குழுவோடு
வந்திறங்கிப் பாடுகின்றன ...
அதே கேள்விகளை!
துளிகளால் சமுத்திரம்
சிவன் கோயிலுக்கு

விளக்குப்போட
அம்மா எடுத்துப்போகும்
எண்ணைக்கிண்ணம் அளவுதான்
இருந்தது!
நான்
திவலைகளாகச் சொட்டுவதற்கு
அதுவே தாராளம்...
அப்போதுதான்
நீ வந்தாய் ...
நீயும் விட இடம் கேட்டாய்
உன்னிடம்
பாவத்தால் சம்மதித்தேன் ...
உன்னிடம்
நேசத்தால்...
உன்னிடம்
இரக்கத்தால்/...
உன்னிடம்
வேறுவழியின்றி....
பிறகு
என் சம்மதத்துக்கே வேலையில்லை...
கிண்ணம்
திருவண்ணாமலை தீபக்கொப்பரையாகிவிட்டது!
ஏ
ஏ
றி
அதற்குள் கவலையை வடிக்க
ஏணிகூட....
ஏற்றி இறக்குவது
யாரென்று
தெரியாமலே
நான் திவலை...திவலையாக...
...
இப்போதும் பலிக்கவில்லை.....
தேவதைகள்
எப்படியிருப்பார்கள் ....
பாரதிராஜாவின் பாடல் போலா...
ஆடை மாற்றம்
நிகழ்ந்திருக்கலாமோ...
சலனமற்ற பார்வையா?
புன்னகைப்பது உண்டா....
அறியாமல்
தவறவிட்டு விடுவேனோ
அச்சத்தால் கேட்கிறேன்...
கேள்விகளை முடித்து
நிமிர்ந்தபோது
மேசையின் எதிர்ப்புறம்
அடையாளம் சொல்லமுடியா
நிறத்தில்
அழகிய மலர்
தேவதை வந்ததன்
அடையாளமாக...
எப்படியிருப்பார்கள் ....
பாரதிராஜாவின் பாடல் போலா...
சித்திரக் கதைகளின்
சிறகுகளோடா .....ஆடை மாற்றம்
நிகழ்ந்திருக்கலாமோ...
சலனமற்ற பார்வையா?
புன்னகைப்பது உண்டா....
அறியாமல்
தவறவிட்டு விடுவேனோ
அச்சத்தால் கேட்கிறேன்...
கேள்விகளை முடித்து
நிமிர்ந்தபோது
மேசையின் எதிர்ப்புறம்
அடையாளம் சொல்லமுடியா
நிறத்தில்
அழகிய மலர்
தேவதை வந்ததன்
அடையாளமாக...
அபி உலகம் 3
விடுமுறை நாளின்
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப் பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப் பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...
சனி, ஜனவரி 07, 2012
இழந்த வரங்கள்
காதலை கண்ணீரை
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,
அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,
அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்
புதன், ஜனவரி 04, 2012
பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர்
நிழல் பெற?
************************
வயலைவிற்று
வாழ்வு பெற்று
பானைபிடிக்கப் போன
பாக்யலக்ஷ்மிக்குப்
பல கேள்விகள் .....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
-
எப்படியோ முடிந்தது பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும் தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப் பார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில...