ஞாயிறு, மே 05, 2019

நாப்கின் மடிப்பின் முனைகள்

நாசூக்காக விள்ளலாக்கி 
நன்கு மென்று
துயரத்தை ஒரு பருக்கை சிதறாது 
செரித்தபின் 
ஏதும் ஒட்டியிருக்குமோ என்ற சந்தேகத்தில் 
நீ ஒற்றியெடுக்கும் 
நாப்கின் மடிப்பின் முனைகள்தோறும்
என் இரத்தப்பொட்டுகள் இருப்பது
 நீ அறியாய்
உன் குப்பையை 
நீ பொருட்படுத்துவதில்லையல்லவா




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...