ஞாயிறு, மே 05, 2019

நின்றுகொண்டு வருபவள்

இந்த நாளிலும் 
சலனமற்ற முகங்கள்
அமர்ந்திருக்கின்றன
படியில் தொங்குகிறவன் 
வழக்கம்போல் ஓடிவருகிறான்
உயரக்கம்பியைக் 
கை தூக்கிப் பிடித்துக் கொள்கிறாள் அவள்
சாயமிழந்த
அடுத்தமுறை அணிகையில் 

நிச்சயம் கிழியப்போகிற
வெக்கையால் 

வியர்வை பொங்கிக்கிடக்கும் 
அந்த ரவிக்கை இடுக்கிலும் 
என்னவோ தெரிகிறது சிலருக்கு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...