ஞாயிறு, மே 05, 2019

ஒளியைப் பார்ப்பேன்

நாற்புறமும் இருளிருப்பினும்
எங்கோ சுடரும் ஒற்றைப்பொட்டு ஒளியின் 
துணைகொண்டு வெளிவருவேன்
வெளிச்சத்தை எதிர்கொள்ளச் சகியாது
உனது கண்கூசும் என்கிறாய் ஆதுரமாக
இருளையே பழகியாயிற்று
ஒளியைப் பார்ப்பேன்
ஒளியில் உன்முகம் சிதைவதையும் பார்ப்பேன்
ஒளி என் பாதை நிறைக்கும்
இருள்,உடல்,இருள்,உடல் சொல்லிச்சொல்லி
மருட்டிய உன் கையை உதறி
ஒளியை மூச்சுக்குள் நிரப்பிக்கொள்வேன்
கைவீசி நடப்பேன்
#பொள்ளாச்சி 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...