திங்கள், மே 13, 2019

பார்க்காத பூ

ஒருபோதும் பார்த்திராத பூவுக்கென்று 
ஒரு பெயர் வைத்திருக்கிறேன்
ஒருபோதும் தொட்டிராத
மேகத்துக்கென்று 
ஒரு முத்தம் வைத்திருக்கிறேன்
என்ன வாசனை...
என்ன மிருது.....
ஒருபோதும் இறங்கியிராத
நதியின் அலையோடு
மிதந்து மிதந்து மிதந்து....

**********************************************
திரைச்சீலை கடந்து
வழியும் வெளிச்சம்
எதையோ தேடித்தேடி
உள்ளோடுகிறது
அப்பாலுக்கப்பாலாய்க் கேட்கிறது 

ஒரு ஜீவகானம்
கரண்டியைச் சரியாய்ப்பிடி
மாற்றெழுத்தைத் தட்டாதே

****************************************************
பசுமை துளிர்த்த மனதை நீவிவிடு
அந்தக்குழலுக்கு செய்யும் மரியாதையாக
ஒரு புன்னகை மிளிரட்டும்
இந்த இசைக் கலைஞனின் 

பிராணன் அல்லவா உறிஞ்சியிருக்கிறோம்
கழற்றிவைத்த மூளை 
சற்று தணப்பருகிலேயே உட்கார்ந்திருக்கட்டும்
நாம் குளிரில் சற்றே உலவி வருவோம்
அட.....இது மூங்கில் குளிர்
வா வா....




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...