ஞாயிறு, மே 05, 2019

இரண்டு சொட்டு அன்பு

மகிழ்ச்சி
அன்பு
காதல்
பாசம்
எத்தனை நல்ல சொற்கள் இல்லையா
சரி
அப்படியே இருக்கட்டும்

********************************************
நன்கு குழிந்த பாத்திரமாக எடுத்திருக்கலாம்
இப்போது பார்
இரண்டு சொட்டு 

அன்பிலேயே தளும்பிவழிகிறது
*********************************************************

என்னைப்பற்றிதான்
பேசிக்கொண்டிருப்பாய்
அப்படிதானே
சரி
ஒன்றும் சொல்லாதிருந்து விடு

*****************************************************
அன்பில் மட்டுமல்ல
உன் புறக்கணிப்பிலும்தான்
மலர்கிறேன்
என்ன செய்யப்போகிறாய்





2 கருத்துகள்:

Massy spl France. சொன்னது…

<>

வணக்கம். இரண்டு வாரங்களுக்கு முன்பே உங்களது "இரண்டு சொட்டு அன்பினால்" கவர்ந்து ஈர்க்கப்பட்டேண். கருத்து சொல்ல நேரம் கிடைக்கவில்லை. வார்த்தைகளினால் உணர்வுகளுக்கு வடிவம் கொடுப்பதற்கு கவிஞர்களால் மட்டுமே முடியும்.

"இரண்டு சொட்டு அன்பிலேயே தளும்பிவழிகிறது>>
அதிக அன்பின் அடக்கமுடியாத உணச்சிகளினால் கண்களில் நீர் தளும்புவது இதனால்தானோ!
நன்றி.

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி .தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...