திங்கள், மே 13, 2019

எலிஎனச் சொல்வது எலியை அல்ல


நேரம் தவறிப்போய்
இரைதேட ஒரு பூனை
எதிர்ப்படுமென எதிர்பாரா எலிகள் 
எதையோ எதிர்பார்த்து
வளைக்குக் குறுக்குவழியை
அறிந்து வைத்துக் கொள்கின்றன.
**************************************************
விட்டம் அறியாது தலையை
விட்டுக்கொள்ள
ஓர் பால்செம்பு கூட இல்லாத
உங்கள் சமையலறையைச் சீண்டாது தாவுது பூனை
எரிச்சலைக்காட்ட டப்பர்வேரைச் சுரண்டிவிட்டாவது
ஓடுகிறது எலி
**************************************************
மீசையும் கண்களுமே உங்களை அச்சுறுத்தப் போதுமென்ற
நினைவோடு
கூரான நகங்களை ஓரப்பார்வையால்
பார்த்துக் கொண்டு நிற்கும்
பூனையை விரட்ட
ச்சூ என்ற ஒற்றைக்குரல் போதுமாயிருக்கிறது.
உங்களை நேருக்குநேர்
சந்திக்காது ஓடும் எலிகளிடம் தான்
ஏதேதோ செய்தும் தோற்றுப் போகிறீர்கள்
*******************************************************
விஸ்வரூபக் கற்பனைகளில்
வாலைநீட்டியோ ஆட்டியோ நகரும்
பிறவிகொண்ட பூனை
எலிக்கறிக்காக உங்களோடு போட்டி கூட
போடும்
நீங்களும் ஒரு மியாவ் எழுப்பி உறவாகலாம்
என்ன செய்வீர் எலியிடம்
எலிவழி தனிவழி
டிஸ்கி#இது அரசியல் கவிதையாகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...